புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்

தமிழில் 'அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்' என்னும் இந்தநூல் முற்றிலும் புதிது. 'அறிவுசார் பொருளாதாரம்', 'அறிவுசார் சமூகம்' போன்ற எண்ணக்கருக்கள் புதிய அறிகை மரபை தோற்றுவிக்கிறது. 
அதாவது, நிகழ்ந்து வந்த யுகமாறுதல்களில் சமூகத்தின் இயக்க விசையாக பல்வேறு சக்திகள் அவ்வக் காலங்களில் கோலோச்சி வந்துள்ளன. இதனை வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. 19ஆம் நூற்றாண்டுச் சமூகத்தில் அல்லது பொருளாதாரத்தில் 'செல்வமே' ஆட்சி செலுத்தியது. 20ஆம் நூற்றாண்டில் இதன் இடத்தினை 'கணினி' பிடித்துக்கொண்டது. 21ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தினை 'அறிவு' பிடித்துக்கொண்டது. ஆக அறிவினைப் பெற்றுக்கொள்ளுதல், அறிவினைப் பாதுகாத்தல், அறிவினைப் பிரயோகித்தல் என்பன 21ஆம் நூற்றாண்டின் தாரக மந்திரமாகும். 
அறிவு என்பது ஒன்றும் நமக்;கு புதிதானது அல்ல. ஆனால் சமூகம் முழுமையும் அறிவுடைய சமூகமாகவும், சமூகத்தின் மூலதனம் அறிவாகவும் கொள்ளப்படும் ஒரு யுக மாற்றத்தின் வாசற்படியில் 21ஆம் நூற்றாண்டுச் சமூகம் வந்துள்ளது. 
அறிவு என்பது இங்கு வெறுமனே கடந்த நூற்றாண்டில் கருதப்-பட்ட பொருளில் அது கருதப்படவில்லை. உற்பத்திச் சாதனங்களும் செல்வமும் கடந்த காலத்தில் முதன்மையான வளமாகக் கருதப்-பட்டது. 21ஆம் நூற்றாண்டில் அதனிடத்தினை அறிவு கவர்ந்துள்ளது. அறிவு ஒரு சொத்தாக வளமாக கருதப்படும் நூற்றாண்டாக 21ஆம் நூற்றாண்டு கருதப்படுகின்றது. இதனால் 'அறிவு' என்பது
அபிவிருத்திக்காக அறிவை உள்வாங்குதும் பயன்படுத்துவதும் ஒரு புதிய சிந்தனையல்ல. வரலாற்றுக்காலம் முழுவதும் அறிவானது அபிவிருத்தியின் மையமாக விளங்கி


கி.புண்ணியமூர்த்தி
Punniyamoorthy, Krishnapillai Prof

கிருஸ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி மட்டக்க்ளப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரிய கல்வியாளராகப் பணிபுரிகின்றார். நிறைய அனுபவம் கொண்டவர். இவர் கற்றல் கற்பித்தல் பணியுடன் மட்டமுல்லாமல் ஆய்வாளராகவும் தன்னை வளம்படுத்திக்கொண்டவர். தொடருறு கல்விச் செய்றபாட்டின் பண்புசார் கல்வி தரவிருத்திக்காகச் கல்விச் சமூகத்தின் பல தளங்களிலும் தீவிர இயக்கம் கொண்டவர். 

சுயதேடல், சுயகற்றல், மற்றும் ஆய்வுசார் பண்பாட்டு மயமாக்கலில் புத்தாக்கமாகப் புத்துணர்ச்சியுடன் ஈடுபட்டு வருபவர். கோட்பாடும் பிரயோகமும் சார்ந்து புதிய ஆய்வுக் களங்களை வெளிப்ப்டுத்துபவர்.