புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கலை இலக்கியக் களஞ்சியம்

சமகாலத்தில் கலைஇலக்கியம் தொடர்பான ஆய்வுகளின் பிரவாகம் புதிய புதிய கலைச் சொற்களினதும் கோட்பாடுகளினதும் ஆக்கங்களோடு இணைந்து எழுச்சிகொள்ளத் தொடங்கியுள்ளது. அவை பற்றிய அடிப்படையான அறிவு செறிவான விமரிசனங்களை முன்னெடுப்பதற்குரிய முன்நிபந்தனையாகின்றது. தெளிவான எண்ணக்கருக்களின் அடிப்படையிலேதான் கனங்காத்திரமான கலை இலக்கிய விமரிசனங்களை முன்னெடுக்க முடியும். 
பல்வேறுபட்ட மொழிகளும் பண்பாடுகளும் நெருங்கி வருகின்ற இற்றைக்காலத்தில் ஒப்பிலக்கியம், இலக்கிய விமரிசனம், மொழிபெயர்ப்பு முதலான புதிய துறைகள் தமிழில் விரிந்தும் பரந்தும் பெருகி வருகின்றன. பிறமொழி இலக்கியத்தின் தாக்கமும் செல்வாக்கும் இற்றைநாள் தமிழ் நூல்களில் காணக்கிடைக்கின்றன. வளர்ந்துவரும் இவற்றின் தேவைக்கேற்ப தமிழ் மொழியின் இலக்கி யச் சொல் வளம் விரிவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 'கலை இலக்கியச் சொற்களஞ்சியம்' ஆக்கமாகின்றது.
நவீன கலை இலக்கியத்தில் பயின்றுவரும் பெருவாரியான கலைச்சொற்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டு நூல்வடிவில் தமிழில் வெளியிடும் முயற்சி பெருமளவு வளரவில்லை. இருப்பினும் பேராசிரியர் வை.சச்சிதானந்தம் 'மேலை இலக்கியச் சொல்லகராதி' எனும் நூலை 1983இல் தமிழில் வெளியிட்டார். இதற்குப் பின்னர் தற்போது சபா.ஜெயராசா 'கலை இலக்கியக் களஞ்சியம்' எனும் நூலைத் தருகின்றார்.
தமிழ்மொழியில் இவ்வாறான நூலாக்கம் தேக்கத்திலிருந்து மீண்டெழும் அறிகை விசையைத் தரவல்லது. கலைஇலக்கிய மாணவருக்கும் விமரிசகருக்கும் உடன் உதவும் உசாத்துணை நூலாகவும் இந்த ஆக்கம் அமைக்கப்பட்டுள்ளது. கலைச்சொற்


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச