புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அ ஆ இ... உயிர்மொழி

"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று பாரதியார் பாடினார் என்று அறிகிறோம்.  "இனிச்சாகும்" என்று பாடினாரா, "இனிச்சு ஆகும்" என்று பாடினாரா என்று தெரியவில்லை என்று தமிழ் நாட்டில் சிலர் குழப்பி விளக்குகிறார்கள்.  பாரதியாரின் கருத்து எப்படி அன்று இருந்ததோ தெரியவில்லை.  ஆனால் தமிழ் நாட்டில் இன்று தமிழ்மொழி படுகின்ற பாட்டைப் பார்க்கின்றபோது "விரைவில் தமிழ் இனிமேல் சாகும்" என்று நிச்சயமாக நினைக்கத் தோன்றுகின்றது.

 
   தமிழ்நாட்டில் அவதிப்படுகின்ற தமிழின் நிலையை நினைந்து, புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர், தமிழ்மொழியை வெளிநாட்டிலாகுதல் அழியாமற் காக்க முடியுமா என்று நீளநினைந்து செயற்பட்டு வருகின்றார்கள்.  தமிழர் பெயர்ந்து வாழ்கின்ற ஐரோப்பிய, கனேடிய, அமெரிக்க, தென்கிழக்காசிய நாடுகளில் தமிழை வாழ வைப்பதற்கான சூழல் இல்லை.  அவ்வாறு இருந்தும், ஈழத்தமிழர் தமிழ்க் கல்விக் கூடங்கள் நிறுவியும், தமிழ்நூல்கள்  எழுதியும், தமிழ் பற்றிய ஆங்கில நூல்கள் எழுதியும், கலை கலாசார நிறுவனங்கள் நிறுவியும், தமிழ்மொழியின் வாழ்வை நிலைநாட்ட முயன்றுகொண்டிருக்கிறார்கள்.   தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கென, தமிழ் வாழ்வுக்கென தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக எடுத்த முயற்சிகள் என்ன ஆயின என்ற கேள்விகள் கேட்கப்படுகின்ற நிலையிலும், ஈழத்தமிழர் சோர்வடைந்து விடாமல் தமிழ் வளர்ச்சித் திட்டங்களில் விடா முய

செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச