புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஆசிரியரை வினைத்திறன் மிக்கவராக்கல்

ஆசிரியர்கள் பாடசாலைக் கல்வி முறையின் மைய விசையாக கருதப்படுகிறார்கள். பாடசாலை கல்வியை விளைதிறன் மிக்கதாக்க வேண்டிய தேவை உலகரீதியாக வற்புறுத்தப்படுகின்றது. கல்வியில்அதிகளவு அரச நிதியை முதலீடு செய்துவரும் இலங்கை போன்ற நாடுகள் பாடசாலைக் கல்வி தோல்வியடையாது தடுப்பது தொடர்பாக தொடர்ந்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இந்த தேவையப்படையில் ஆசிரியர்கள் பற்றிய கவனக்குவிப்பு அதிகரித்து வருவது நியாயமானதாகிவிட்டது. 
ஆசிரியர்கள் தம்மளவிலும் பாடசாலை மட்டத்திலும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டியது மிக அவசியமாகும். இவை தொடர்பான அம்சங்கள் இந்நூலி ஆராயப்பட்டுள்ளன. அதேபோல் சமூக மட்டத்திலும் பல்வகைப்பட்ட மாதிரிகளில் தொழிற்பட வேண்டியுள்ளது. இதனால் பாடசாலை ஆசிரியர்களை விளைதிறன் மிக்கவராக முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் பற்றியும், வழிகாட்டல்கள் பற்றியும் இந்நூல் விரிவாக ஆராய்கின்றது.
ஆழமாக இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியரதும் சிந்தனை, நடத்தை என்பவற்றில் நிச்சயமாக மாறுதல்கள் ஏற்படும் என நம்புகிறேன் எனது வாசிப்புப்பலமும், அனுபவங்களும் ஆசிரியர் மீதான கூர்மையான எனது அவதானமும் இந்த நூலை விரிவாக எழுதுவதற்கு எனக்கு உதவின.
இந்த நூலை எழுதுங் காலத்தில் எனக்கு பல்வேறு வழிகளிலும் உதவிய எனது அன்பு மனைவி சசிலேகாவுக்கும் எனது பிள்ளைகளான சிராணி, சாளினி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.
நெருக்கடியான காலகட்டத்தில் தமிழர் உயர்கல்வி நிறுவனமான யாழ்ப்பாணப் பல்களைக் கழகத்தை திறமையாக நிர்வகித்து வரும் துணைவேந்தர் பேராசிரியர் நாகலிங்கம் சண்மு


எஸ்.ரகுராம்
S.Raguram

சிவசுப்பிரமணியம் ரகுராம் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கையியல் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிபவர். இவர் தொடர்பியல் கல்வியை தமது சிறப்புத் துறையாகத் தேர்வு செய்து ஆய்வுகளை மேற்கொள்பவர். இத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடர்பாடல் கற்கைகள் சமூகவியல், பண்பாட்டியல், கலைகள், உளவியல், மொழியியல், அரங்கியல், நாட்டார் வழக்காற்றியல், அரசியற் பொருளியல் முதலான பல்துறை அறிவுப் புலங்களுடன் ஊடாட்டம் கொண்டது. இந்த அறிகை மரபின் பன்முக ஆய்வு இணைப்பாக்கப் பின்புலத்தில் உயிர்ப்புடன் இயங்குபவர்.