புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கற்றல் கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறைகள்

இன்று நாளாந்தம் சமூகஅறிவியல், இயற்கை அறிவியல் மற்றும் மனிதப் பண்பியல் துறைகளில் ஆராய்ச்சிகளினூடாக அறிவுப் பெருக்கம் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகப் பாடசாலைகளில் பெறப்படும் அறிவும் திறன்களும் சிறிது காலத்தின் பின் காலாவதியாகிப் போகின்றன. அவை பயனற்றும் பொருத்தமற்றும் போகின்றன.
 
ஆகவே, பாடசாலைக் காலத்தின் அறிவையும்  திறன்களையும் மாணவர்கள்  சுயமாகக் கற்றுக் கொள்ள வேணடிய அவசியம் ஏற்படுகின்றன. இதனால் வாழ்நாள் முழுவதும் அறிவையும், திறன்களையும் புதுப்பித்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான், புதிய அறிவியல் தொழில்நுட்ப சமுதாயத்தில் இணங்கி வாழ்வது சாத்தியமாகும். 
 
எனவே, பாடசாலைக் கல்வியானது மாணவர்கள் விலகிய பின்னரும் புதிய அறிவையும் திறன்களையும் கற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் முறையில் சுயமாகக் கற்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொடுப்பதாக இருத்தல் வேண்டும். சுயஅறிவு, சுயதேடல், சுயகற்றல் போன்ற அம்சங்களை வலியுறுத்தும் கல்விச் செயற்பாடுகள் எம்மிடையே விரிவுபெற வேண்டும்.
 
ஆகவே, மாணவர்களது சுய கற்றல், சுயஅறிவு, சுயதேடல் போன்ற பண்புசார் விருத்திக்கமைய கற்றல்-கற்பித்தல் செயன்முறை அமைய

பொ.கனகசபாபதி
Kanakasababathy, P

             திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இலங்கை, இந்திய, கனடியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். அவரது படைப்புக்களிற் சில, அதிபர் ஒருவரின் கூரிய பார்வையில், பெற்றோர்ஃ பிள்ளை உளவியல், மாறன் மணிக்கதைகள் (இருபகுதிகள்), திறவுகோல், மனம் எங்;கே போகிறது என்ற தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
             சென்னைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறப்புப் பட்டம் பெற்று மகாஜனக் கல்லூரியில் அவர் ஏற்றுக் கொண்ட ஆசிரியப் பணி, சக மனிதர்களை மேம்படுத்தும் அவரது நோக்கத்திற்கு உவப்பாய் அமைந்தது. அதிபராய் அவர் பணிபுரிந்த காலங்களிற் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பெருவளர்ச்சியுற்றன. புலம் பெயர்ந்து நைஜீரியாவில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், கனடாவில் ரொறன்ரோ  பாடசாலைச் சபையின் கல்விசா