புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கலைத்திட்ட மாதிரிகைகள்

கல்வி தொடர்பாகவும், இந்து சமயம் தொடர்பாகவும் எனது பல கட்டுரைகள் வெளிவந்த போதும் இந்நூலே எனது கன்னி வெளியீடாகும். ஆசிரியத் துறையில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும் கலைத்திட்டம் தொர்பான அறிவு இன்றிய மையாததாகும். இந்நூல் கலைத்திட்ட மாதிரிகளும் அம் மாதிரிகள் இலங்கையின் கலைத்திட்ட உருவாக்கத்திலும் விருத்தியிலும் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் ஆராய்கிறது.
பூரணமான கலைத்திட்ட மாதிரிகளை உள்ளடக்கித் தமிழில் போதிய நூல்கள் வெளிவந்திருக்கவில்லை. அக்குறைபாட்டை நிவர்;த்தி செய்வதாக இந்நூல் அமையும் என நினைக்கிறேன். கல்விக் கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆசிரிய பயிலுனர்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் கல்விமாணிப் பாட நெறியைப் பின்பற்றும் மாணவர்கள், பட்டப்பின்படிப்புக் கல்வி டிப்ளோமாப் பாட நெறியைப் பின்பற்றும் மாணவர்கள், கல்வி முதுமாணி, ஆசிரிய கல்வியில் முதுமாணிப் பாடநெறிகளைப் பின்பற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரது கல்வித் தேவைகளையும் பூர்த்திசெய்வதாக  இந்நூல் அமையும் எனக் கருதுகிறேன்.
கலைத்திட்டம் தொடர்பாகக் கற்றுக் கொள்ள விளையும் மாணவர்களுக்கப்பால் இலங்கையின் கலைத்திட்ட உருவாக்குனர்க ளையும், கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கல்வித் திணைக்கள அதிகாரிகளையும்  பாடசாலை முகாமைத்துவத்தை வழிநடாத்திச் செல்லும் பாடசாலை அதிபர்களையும் இந்நூல் நிச்சயம் கவரும் என்பதுவும் எனது எதிர்பார்ப்பாகும்.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாட்டில் இருக்கின்ற வரையறுக்கப்பட்ட வ


தி.கமலநாதன்
Kamalanathan, T

திருநாவுக்கரசு கமலநாதன் ஆசிரியர் சேவையில் இணைந்து ஆசிரிய கல்வியாளர் சேவையில் முகிழ்த்தவர். விரிவுரையாளர், உபபீடாதிபதி,  பீடாதிபதி எனப் பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி உயர்ந்தவர். கல்வியியல் கற்கையில் 'முனைவர்' பட்டம்  பெற்றவர். தனது சொல் செயலால் தன்னைத் தனியாக அடையாளம் காட்டியவர்.         கல்விச் சூழலில் காலத்தை வென்ற கமலமாகப் பூத்தவர். 

இவர் பெற்ற அனுபவமும் அறிவும் வளமானது.  இதுவே இவரை கல்வி அமைச்சில்  கல்விசார் தரவிருத்திக்கு மதியுரைஞராகவும் இருத்தியுள்ளது. தொடர்ந்து கல்வியியல்சார் சிந்தனைகளை ஆக்கமாகவும் வெளிப்படுத்திக்         கொண்டிருப்பவர். சமூக சமயப் பணிகளிலும் தமிழ்ப்பணிகளிலும் ஈடுபாடு கொண்டு 'வாழ்வின் அர்த்தம்' முழுமையடைய       இயங்கிக் கொண்டிருப்பவர்.