புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

முகாமைத்துவக் கொள்கைகள் - ஓர் அறிமுகம்

சமூக அறிவியல் துறைகளில் பொருளாதார மேம்பாட்டுடன் தொடர்புடையதும் நேரடியாக வாழ்க்கைப் பயன்பாடுடையதுமான ஒருதுறை முகாமைத்துவம் எனலாம். இன்று முகாமைத்துவம் ஒரு புலமைசார் துறை என்ற முறையில் பெருவளர்ச்சி பெற்றுள்ளதோடு அத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு நிகரான பல  முகாமைத்துவக்கல்வி நிறுவனங்கள் உலகில் எழுந்துள்ளன. இத்துறைசார்ந்த ஆய்வாளர்கள் நூல்கள் சஞ்சிகைகளும் ஏராளம். ஐக்கிய அமெரிக்கா உலகில் பெரு வல்லரசானதற்கான காரணங்கள் பற்றிக் கூறும் முகாமைத்துவ மற்றும் எதிர்காலவியல் பெருமறிஞரான பீற்றர் ட்றக்கர் அந்நாட்டில் முகாமைத்துவத் துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களை ஒரு காரணமாகக் கூறுகின்றார். உலகளாவிய மகத்தான சாதனைகளுக்குப் பின்னணியில் (பிரமிட், சீனப் பெருஞ்சுவர்) ஏதோவொரு முகாமைத்துவம் இருந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இன்று முகாமைத்துவம் நிறுவனங்களைப் பொறுத்த வரையில் மட்டுமன்றி குடும்பம், பொருளாதாரம், இனமுரண்பாடுகள், அறிவு, கோபம் என்பவற்றைப் பொறுத்தவரையிலும் கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் நாற்பது சதவீதமான ஊழியர் தொகுதியினர் சாதாரண தொழிற்சாலை ஊழியராக இருந்தனர். முதலாம் யுத்த காலத்தில், முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காலத்தில் மக்களில் 35 சதவீதமானோர் வீட்டுப்பணியாளராகவே பணிபுரிந்தனர் என பீற்றர் ட்றக்கர் மதிப்பிடப்பட்டுள்ளார். இன்றைய அமெரிக்காவில் ஊழியர் தொகுதியில் 35 சதவீதமானோர் 'முகாமையாளர்களும் உயர்தொழில் வல்லுநர்களும்' எனக் குறிப்பிடப்படுகின


மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.