புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சூழல் கதை

தமிழ்மொழிச் சூழலிலே குழந்தைகளுக்குரிய எழுத்தாக்கங்களிற் கவனம் செலுத்தப்படுமளவுக்கு வளர்ந்த சிறுவர்க்குரிய இலக்கிய ஆக்கங்களிலே போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது மனங்கொள்ளப்பட்டுள்ளது.  பள்ளிக்கூடங்களிலே இளம் இடைநிலை மட்டத்துச் சிறார்களின் வாசிப்புச் சுவையைத் தூண்டும் வகையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.  இது ஒரு பரிசோதனை முயற்சி. இதிலிருந்து கிடைக்கப்பெறும் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் முயற்சிகளை முன்னெடுக்கலாம்.  இத்தகைய எழுத்தாக்கங்களுக்கு உற்சாகமளித்து வரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரும் சேமமடுஃ பத்மம் பதிப்பகத்தினரும் நன்றிக்குரியவர்கள்.
சபா.ஜெயராசா


சந்திரசேகரப் பண்டிதர்
Chandrasekara Pandithar

மிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. 
திரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார்.
இவ்வெளியீடு பற்றி  இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் க