புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வித்தியின் இலக்கிய மூன்னீடுகள்

முன்னுரைகள் பற்றிய ஆய்வுகளின் தொடர்ச்சி அதனைத் தனித்துவமான ஒரு இலக்கிய வடிவம் என்ற நிலைக்கு மேலுயர்த்தியுள்ளது. ஆழமான முன்னுரைகள் வெறுமனே அறிமுகக் குறிப்புக்களாக மட்டும் அமைந்துவிடுதல் இல்லை. பல்வேறு கலைப் பரிமாணங்களின் செறிவும், திறனாய்வு வீச்சுக்களும், வளமான எடுத்தியம்பல் முறைகளும் திறன்மிகு முன்னுரைகளின் இடம்பெற்றுள்ளமையைக் காணமுடியும். முன்னுரைகள் ஒருவகையில் கருத்து வினைப்பாட்டின்  (னுளைஉழரசளந) கட்டுச்செட்டான வடிவங்களாக அமைதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இவ்வகையில் பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரின் முன்னுரைகளின் தனித்துவங்களை வரைபுபடுத்த வேண்டியுள்ளது.
வரலாற்று நிலையிலும் தமிழியல் நிலையிலும் தனித்துவமான முன்னுரைக்கங்கள் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. தரப்பட்ட நூலியங்களை ஊடறுத்துச் செல்லும் அறிகை நிலையின் வெளிவீச்சுக்களாக அவை அமைந்துள்ளன. 
தமிழ் மரபில் முன்னுரை என்பது 'பொதுப்பாயிரம்' 'சிறப்புப் பாயிரம்' என இருதுறையாக எண்ணக் கருவாக்கம் செய்யப்பட்டது. பொதுப்பாயிரத்தில் நூலின் வரலாறும், நூலாசிரியர் வரலாறும், ஆசிரியன் பாடங்கூறும் வரலாறும், மாணக்கர் வரலாறும், மாணக்கரின் கல்வியறியும் வரலாறும் கூறப்படும், சிறப்புப் பாயிரம் நூலின் பெயர், நூல் வந்தவழி, நூலாசிரியர் பெயர், நூலின் பெயர், நூல் குறித்த பொருள், நூற்பயன் முதலியவற்றைக் குறித்து நின்றது.
மேலைப்புலக் கல்வியின் பரவல் மேற்குறித்த நிலைகளில் இருந்து முன்னுரைகளை இலக்கியக் கருத்துவினைப் பாட்டுத் தள


மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.