புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இளைஞர் இலக்கியம்: உலகை மாற்றிய நவீன சிந்தனையாளர்கள்

இளைஞர் இலக்கியம், இளம் வளர்ந்தோருக்கான இலக்கியம், விடலைப் பருவத்தினருக்குரிய இலக்கியம், கட்டிளைஞர்களுக்குரிய இலக்கியம் என்ற சொல்லாடல்கள் ஏறத்தாள ஒரு பொருள் குறித்து நிற்கின்றன.
இப்பிரிவினருக்குரிய எழுத்தாக்கங்கள் சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பொழுதுபோக்கு நிலையிலும் முக்கியமானவை. ஊறுபடாத சிந்தனைகளை அவர்களிடத்து வளர்ப்பதன் வாயிலாக வளமான சமூகத்தை உருவாக்க முடியும்.
அவர்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்லும் சமகாலச் சூழலில் ஆக்கநிலை வழிகாட்டல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்நிலையில் நேர்ப்பண்பு மிக்க எழுத்தாக்கங்களையும், கலையாக்கங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
தமிழில் இத்துறையில் போதுமான ஆக்கங்கள் இடம்பெறவில்லை. இத்துறையின் முக்கியத்துவம் இன்னமும் உற்றுணர்வு  கொள்ளப்பட வில்லை. அறிவும், ஆற்றலும், நேர்ச் சிந்தனையும், ஆக்கமலர்ச்சியும் கொண்ட இளைஞர் சமூகத்தின் ஆக்கத்துக்குரிய நூல்களும், கலைப்படைப்புக்களும் உடனடித் தேவைகளாகின்றன. தமிழில் உரிய காலத்தின் தேவைகளை உணர்ந்து இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது.
சபா.ஜெயராசா

 


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச