புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

மெய்யியல்

பேராசிரியர் நா.ஞானகுமாரன் கடந்த முப்பந்தைந்து வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மெய்யியல் துறையில் பணியாற்றிவருபவராவர். துடிப்பும் ஆர்வமும் மிக்க இவர் மெய்யியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். 'சைவசித்தாந்தத் தெளிவு', 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்', 'நயந்தரும் சைவசித்தாந்தம்', 'அருளாளர்களின் சமய அனுபவம்', 'மெய்யியல்', 'சைவ சமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு', 'சைவ சித்தாந்தத்தில் அத்வைத எண்ணக்கருத்து', 'வேதாந்த மெய்யியல்', 'மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும்' போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார். சைவசித்தாந்தத் தெளிவானது சமீபத்தில் திருத்திய பதிப்பாக வெளிவந்துள்ளது. அதேபோல இந்நூலும் அநேகரது வேண்டுகோளிற்கிணங்க திருத்திய பதிப்பாக புதிய அத்தியாயங்களும் இணைக்கப்பட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும். இவரது சைவ சித்தாந்தத் தெளிவானது சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மெய்யியல், சைவசித்தாந்தம், வேதாந்தம், சார்ந்த பல ஆய்வுக்கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிப் பாராட்டைப் பெற்றவர். இவர் சர்வதேச ஆய்வரங்குகளிலும் பல கட்டுரைகளைச் சமர்ப்பித்ததுடன் ஒப்சலா பல்கலைக்கழகம்  சுவீடன், அரிசோனா பல்கலைக்கழகம் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆய்வாளராகவும் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். 
திருத்திய பதிப்பாக வெளிவரும் இந் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன். மெய்யியலைக் கற்க விரும்பும் மாணவர்


க.சி.குலரத்தினம்
Kularatnam, C.S

ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து ம