புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும்

முன்னுரை
ஆசிரியர் தன் பணியைச் செவ்வனே மேற்கொள்வதற்கு உறு துணையாக அமைவது அவரது கல்வி உளவியலறிவாகும். கற்போனின் விருப்பு வெறுப்பு உள்ளடங்கிய ஆயத்தநிலை, கற்றற் செயல்களில் அவன் ஈடுபடுகின்ற தோரணையும் அச்செயல்களினூடாக அவன் பெறுகின்ற தகைமைகளும், கற்றலின்போது, எதிர்ப்படும் தடங்கல் கள் அல்லது இடர்பாடுகளை வெற்றிக்கொள்ளும் வழிமுறைகள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் பற்றிய பூரண அறிவை ஆசிரியர் பெற்றிருத்தல் அவசியம். இவற்றோடு கூடிய திறன்களைப் பெற்றிட வும் உரிய மனப்பாங்கினை வளர்த்திடவும் கல்வி உளவியலறிவு அவருக்கு இன்றியமையாததாகும். 
பாடத்தைப் போதிக்க விளையும் ஆசிரியன் பாடப்பொருளை மட்டும் அறிருந்திருத்தல் போதாது: தன் மாணவனையும் அறிந்திருத் தல் வேண்டுமென்பர் அறிஞர். மாணவனை அறிந்திருத்தல் எனும் போது, அவனது அறிகைசார், எழுச்சிசார், உள - இயக்கஞ்சார் விருத்திகள் பற்றி ஆசிரியர் அக்கறை கொண்டிருக்க வேண்டியமை வலியுறுத்தப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு பிள்ளையினதும், ஒவ்வொரு வகை விருத்திக்கும் விருத்திப் படிநிலைகளுக்கும் ஏற்பக் கற்றல் நிலைமைகளைக் கையாளும் திறனையும் ஆசிரியர் கொண்டி ருத்தல் எதிர்பார்க்கப்படுகின்றது. மாணவனிடத்தே காணப்படும் மாற்றங்களினூடாகவே அவனிடத்தில் ஏற்படும் கற்றல் பற்றி நாம் அறிய முடிகிறது. ஆயினும், மாணவனிடத்தில் ஏற்படக்கூடிய நடத்தை இயல்புகள் யாவற்றையும் நாம் எமது புலனனுபவங்களினூடாக நேரடியாக அறிய முடியாது. பிள்ளையில் அவதானிக்கப்படக்கூடிய, பிற செயல்கள் அல்லது நடத்தை மாற்றங்களினூடாகவே அவனது அறிகை விருத்தி பற்றிய அனுமானங்களை மேற்கொள்கின


கவிஞர் துரையர்
Thuraisingam, S

கவிஞர் துரையர் என இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட கலாபூஷணம் சு.துரைசிங்கம் அவர்களைக் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அறிவேன். ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக உயர்ந்து வந்தவர் அவர். அவரது பதினாறாவது வயதில், சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி மாணவராக இருந்தபோது அவரது முதலாவது கவிதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல ஊடகங்களில் எழுதிக் கொண்டிருந்த இவர் 1972இல் தனது தெருவிளக்கு என்ற கவிதை நூலினை வெளிக்கொணர்ந்தார். சிறுவர் பாடல் தொகுதிகள் மூன்று சமயம் சார்ந்த நூல்கள்   மூன்று, புவியியல் சார்ந்த நூல்கள் இரண்டு ஆகியவை  இதுவரை வெளிவந்துள்ளன. கவிக்குரல்கள் என்ற  ஒலிப்பதிவு நாடாவும் இந்து தர்மத்தில் பத்துக்கள் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட இவரால் தயாரிக்கப்பட்டவை. இந்து தர்மத்தில் பத்துக்கள் மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள த