புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்

நவீன கல்வி முறைமையோடு இணைந்த தொழிற்பாடாகத் தொடர் தொழில் வழிகாட்டல் அல்லது ஆற்றுப்படுத்தல் அமைந்து வருகின்றது. 
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றித் தொழில் நிறுவனங்களும் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றன.
மனித வளத்தை உச்ச நிலையிலே பயன்படுத்திக் கொள்வதற் கும் தொழிற் சோர்வை நீக்கி தொழில்சார் உளநிறைவை ஏற்படுத்திக் கொடுத்தலுக்கும் வளமுள்ள வழிகாட்டல் வேண்டப்படுகின்றது. 
வழிகாட்டுனர் மேலாதிக்க நிலையிலிருந்து செயற்பாடுகளை முன்னெடுத்தல் தவறானது. மாணவரின் உளச்சார்பு மற்றும் தனித்து வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்காது, உறுவளஞ்செய்யும் நிலையிலிருந்தே வழிகாட்டலைத் தருதல் வேண்டும்.
வழிகாட்டல் என்பது உளவியல் மயப்பட்ட ஒரு செயற்பாடு என்பதை மறந்துவிடலாகாது. அதேவேளை தொழிற்கட்டமைப் புக்களோடு இணைந்துள்ள வர்க்க சார்புடைமையை அறிகை நிலையிற் புலப்படுத்துதலோடும் வழிகாட்டலை முன்னெடுத்தல் சமூக நீதியாகின்றது.
வழிகாட்டல் ஒரு புலமைப்பயிற்சியாக மட்டும் அமைதல் இல்லை. அது சமூக நீதியுமாகின்றது. அது எந்த வர்க்கத் தளத்திற் செயற்படுகின்றது என்பது மிகமுக்கியமானது.
சபா.ஜெயராசா

 

 


அகளங்கன்
Akalangan

பண்டைய தமிழ் மணத்தையும், இன்றைய தமிழ் உணர்வையும் தனது எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் வாழ்வியலாலும் மக்கள் மத்தியில் பரப்பி வருபவர். தமிழிலக்கியக் கட்டுரைகள், கவிதை, ஆய்வு, நாடகம், சிறுவர் இலக்கியம், அறநூல் உரைகள், இசைப் பாடல்கள், சிறுகதை எனப் பல்வேறு தளங்களில் இயங்குபவர். 

 
தேசிய, வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய விருதுகள், வடக்குக் கிழக்கு மாகாண ஆளுனர் விருது மற்றும் அரச, அரச சார்பற்ற சமூக, சமய நிறுவனங்களின் தேசிய விருதுகளையும், பரிசுகளையும், பட்டங்களையும் பெற்ற சிறந்த இலக்கிய கர்த்தா.வன்னியின் மைந்தன் என்று தன்னை அடையாளப்படுத்துவதை பெருமையாக கொள்பவர்.  வன்னி மக்களின் கல்விப் பயணத்திற்கு தினம் அரும்பாடுபட்டுக் கொண்டு தன்னை முழு