புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

திருக்குறளும் முகாமைத்துவமும்

கலாநிதி தி. வேல்நம்பி பல்துறை வல்லுநர்.  சமூக விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த அவர் தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்த் திறனாய்விலும் பரிச்சயமுடையவராயுள்ளார். சிறந்த தமிழ்ப் பேச்சாளர்.  பட்டிமன்றங்களிலே பங்குபற்றித் தமிழ்ப் புலமையினை வெளிப்படுத்தி வருபவர்.  யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே தமிழ்ப் பாடத்தில் முதுகலைமாணிப்பட்ட கற்கைநெறி தொடங்கியபோது, அதிலே சேர்ந்து கற்றவர். முதுகலைமாணிப் பட் டத்துக்காக அவர் எழுதிய ஆய்வேடு மிகச் சிறந்ததாக அமைந்தது. என்னுடைய வழிகாட்டலிலே அவர் அந்த ஆய்வேட்டினை எழுதிப் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்தார்.  அது இப்பொழுது திருக்குறளும் முகாமைத்துவமும் - ஓர் ஒப்பீட்டாய்வு என்னும் தலைப்புடன் நூலாக வெளிவருகின்றது.
இந்நூல் ஆறு இயல்களைக் கொண்டமைகின்றது. பொது முகா மைத்துவத்திலே காணப்படும் பல்வேறு விடயங்களை எடுத்துக் கொண்டு அவை எவ்வாறு திருக்குறளிலே காணப்படுகின்றன என் பதை அறியும் தேடல் இந்நூலிலே இடம்பெறுகின்றது.  முதலில் பொது முகாமைத்துவம் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும் குறட்பாக் களை இனங்கண்டு விளக்கம் தரப்படுகின்றது.  வள்ளுவன் திட்டமிடல், ஒழுங்கமைப்பு பற்றி திருக்குறளிலே என்ன கூறியுள்ளான் என்பதைத் தேடித் தொகுத்து, முகாமைத்துவக் கோட்பாடுகளுக்கு அவை இயை புற்றிருக்கின்றனவா என்பதை ஆசிரியர் ஆராய்ந்து விளக்கம் தருகின் றார்.  ஆட்சேர்ப்பு, வழிநடத்தல், கட்டுப்படுத்தல் முதலான கருத்துக் களை எவ்வாறு வள்ளுவனின் குறட்பாக்கள் வெளிப்படுத்துகின்றன என்பது பற்றியும் ஆசிரியர் விரிவான விளக்கம


க.சி.குலரத்தினம்
Kularatnam, C.S

ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து ம