புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமகாலக் கல்வி

நூலாசிரியர் உரை
சமகாலக் கல்வியின் பலபரிமாணங்களையும் உள்ளடக்கிய ஓர் ஆக்கமே இந்நூல். பல்வேறு நூல்களையும் அறிக்கைகளையும் அடியொற்றி இந்நூல் எழுதப் பெற்றுள்ளது.
சமகாலக் கல்விச் செயல் முறையின் நவீன எழுகோலங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தெளிவான ஒரு கருத்தியல் நோக்கு கல்வி பற்றிய விளக்கத்துக்கு அடிப்படையானது. அந்நிலையில் உற்றறி கோட்பாடு இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.
அறிவை விபரணச் சிக்கலுக்குள் அடக்கிவிடும் ஓர் அவலமான நிலை காணப்படுகின்றது. திறனாய்வுடன் அறிவைத் தரிசிக்கும் அறிகைப் பரவல் முன்னெடுப்பை வலியுறுத்தும் தேவை எழுந்துள்ளது.
பாடக்குறிப்புக்களை உள்வாங்குதலும் மீள ஒப்புவிப்பதுமான கற்றல் முறையை விடுவிப்பதற்கு மாணவரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. அந்நிலையில் போதுமான நூல்களை உருவாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது.
-சபா.ஜெயராசா

 


மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.