புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஏழாவது ஊழி

நான் சிறுவயது முதலே இயற்கையை நேசிப்பதிலும், இயற்கையைப் பற்றி அறிந்துக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டவனாக இருந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் எனது கிராமமான திருநெல்வேலியில் பரவைக்குளம் என்ற நீர்த்தேக்கம் இருக்கிறது. அன்று, குழத்தையொட்டிப் பச்சை பசேலென்ற நெல்வயல்கள் இருந்தன. வீட்டுக்குச் சொல்லிக்கொள்ளாமல் குளக்கரையில் வந்தமர்ந்து விடுவேன் காற்றுத் தலைவாரிவிடும் போது நெற்பயிர்களில் ஏற்படும் அசைவு என்னுல் ஆச்சர்யத்தை கிளர்ந்தும் குளக்கரை இலந்தை மரத்தில் குடியேரியிருக்கும் தகதகக்கும் பொன்வண்டுகளும் குளத்தில் மலர்ந்து சிரிக்கும் தாமரைப் பூக்களும், 'மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும்' காட்டும் விலாங்கு மீன்களும், பச்சை தவலைகளும் என்னை பரவசத்தில் ஆழ்த்தும். தாமரைப்பூக்களை பறிக்கச் சென்றச்சிலர் சேற்றில் சிக்கி இறந்ததாக ஊரில் கதைகள் உலாவின. இதனால் குளக்கரைக்கு போய்வந்து வீட்டுக்குத் தெரியவந்த நாட்களில் பெற்றோரால் கண்டிக்கவும் தண்டிக்கவும் பட்டது இன்றும் நினைவில் இருக்கின்றது. 
    யாழ்பாணம் இந்துக்கல்லூரியில் உயர் வகுப்புப் பயின்றப் போது எனக்கு உயிரியல் ஆசானாக வாய்த்தவர் க.சி. குகதாசன் அவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே மாணவர்களை அழைத்துச்சென்று இயற்கையை அதன் முழு அர்த்தப் பரிமாணத்தில் புரியவைப்பதில் வல்லவர் அவர். யால்பாணத்தில் தொண்டைமானாருக்கும் அது போசிக்கும் கண்டற்காடுகளுக்கும் பல தடவைகள் எங்களை அழைத்துச் சென்றார். இவரால், யாழ்பாணத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடமாகக்கண்டற்சூழல் ஆகிப்போனதில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல


தி.செல்வமனோகரன்
Mr.Selvamanoharan

திருச்செல்வம் செல்வமனோகரன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்   இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர்  'இந்து மெய்யியல்'  துறையை  தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள்  குறித்து புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது  கண்டுபிடிக்கும் அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.   மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித்  தமக்கான விமரிசனச் சிந்தனைசார்  நவீன அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்.  மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை  வளர்த்து நிதானமாக  இயங்குபவர். தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்'  குறித்த தேடல் தவிர்க்க ம