புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தலைமைத்துவக் கோட்பாடுகள்

'தலைமைத்துவக் கோட்பாடுகள்'  என்னும் தலைப்புடன் வெளிவரும் இந்நூல் எனது மூன்றாவது நூலாகும். இதனை எழுதி தமிழ் வாசகர்களுக்கு விசேடமாக தமிழ்மூலம் முகாமைத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சமர்ப்பிக்க முடிந்தமையை எண்ணி நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது முகாமைத்துவ கற்கைநெறியில் தலைமைத்துவம் என்னும் தொனிப்பொருள் தொடர்பாக இருக்கக்கூடிய வெற்றிடத்தை இந்நூல் ஓரளவேனும் நிரப்பக்கூடும் என்னும் எனது பணிவான நம்பிக்கையாகும். 
எந்தவொரு நிறுவனத்தினதும் விளைதிறன் மேம்பாட்டுக்கு தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. நிறுவனங்கள் மட்டுமல்லாது ஒரு குடும்பத்தின் மேம்பாட்டுக்கும் ஒரு தேசத்தின் வெற்றிக்கும் கூட தலைமைத்துவமே பங்களிப்பு வழங்குகிறது. எனவே, தலைமைத்துவம் தொடர்பான ஆய்வுகள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. அத்தகைய ஆய்வுகளின் விளைவாக தலைமைத்துவம் தொடர்பான சார்பிலக்கியம் மிகவும் செழுமையடைந்துள்ளது. இத்தொனிப்பொருள் தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு எண்ணிறந்த கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்றும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. முகாமைத்துவம் தொடர்பான தொனிப்பொருள்களில் தலைமைத்துவம் பற்றியே அதிகளவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதோடு நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தூரதிர்ஷ்டவசமாக ஏனைய அறிவியல் துறைகள் போலவே தலைமைத்துவம் தொடர்பாகவும் தமிழில் நூல்கள் அரிதாகவே உள்ளன. 
இன்று தனியா


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச