புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இளம்வளர்ந்தோர் இலக்கியம்

இளம் வளர்ந்தோர் இலக்கியம் (லுயடவைநசயவரசந) சமகால இலக்கியத் துறையில் அதிக முக்கியத்துவத்தை எட்டத் தொடங்கியுள்ளது. பெருந்தொகையான புனைகதை மற்றும் புனைகதை சாரா நூல்கள் இத்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளிலே வெளிவந்த வண்ணமுள்ளன. தனித்துவமான திறனாய்வு முயற்சிகளும் எழுகோலம் பெற்று வருகின்றன.
இளைஞர் நலன்களை மேம்படுத்தும் வகையில் அரச திணைக்களங்களும், மன்றங்களும், தொண்டு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இளைஞர்களின்  அரசியல் ஈடுபாடும் சமூக மாற்றங்களில் அவர்களது பங்கெடுப்பும், ஆயுதப் போராட்டங்களில் ஈடுபாடும் கல்வியியலாளரதும் சமூகவியலாளரதும் ஊன்றிய கவனத்தைப் பெற்று வருகின்றன.
இளைஞர்களை ஆற்றுப்படுத்தலும் அவர்களின் ஆக்க மலர்ச்சியை வெளிக்கொண்டு வருதலும், உடனடித் தேவைகளாக மேலெழுகின்றன. சமூகப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் துலங்குவோராய் இளைஞர்கள் இருத்தலினால்  அவர்கள் மீதான கவனமே மேலோங்கத் தொடங்கியுள்ளது.
சபா.ஜெயராசா

 


சிவசுப்ரமணியம், த ( தம்பு-சிவா)
Sivasubramaniam, T

இந்தத் தொகுதியைத் தந்துள்ள தம்பு சிவா அவர்கள் இதழியலில் நீண்டகால அனுபவ வீச்சைக் கொண்டவர். சளைத்தலின்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆற்றல் அவரிடத்து மேலும் விசை பெற்றுள்ளது.

இத்தொகுதியில் இடம்பெற்ற அனைத்துக்கதைகளும்  'வெளிமலர்ச்சி நடப்பியல்' சார்ந்தவையாகவுள்ளன. நாளாந்த வாழ்விலே நடப்பவற்றையும் 
கண்டு அனுபவித்தவற்றையும், ஈடுபாட்டுடன் 
நுகர்ந்து கொண்டவற்றையும் உணர்ச்சிகளை ஏற்றித்தருதல் கதைகளிலே காணப்படும் இயல்பாகின்றது. 
நடப்பியலும் உணர்ச்சியியலும், உள்ளுணர்வும் 
வெளிமலர்ச்சி நடப்பியலை நோக்கி நகர்த்துகின்றன.  
வாழ்க்கையின் சம்பவத் துணிக்கைகள் ஒவ்வொரு கதையிலும் நிலைமாற்றம் செய்யப்படும் பொழுது நடப்பு நிலவரங்கள் 
சிலாகித்து மேலெழுந்து நிற்கின்றன.
கதையின் எடுத்துரைப்பு வழியாக 
வாழ்க்கை மற்றும் சமகாலத்தைய சூழல் பற்றிய