புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அழகியல்

தமிழில் 'அழகியல்' தொடர்பான அடிப்படை நூல்கள் இன்னும் தெளிவாக உருவாக்கப்படவில்லை. அதாவது, அழகியல் தொடர்பான தத்துவார்த்தச் சொல்லாடல்களை எண்ணக்கருக்க-ளை முன்வைத்து கோட்பாடாக்கம் செய்யப்பட்ட நூல்கள் எழுதப்-படவில்லை. ஆங்காங்கு அழகியல் தொடர்பான சில கட்டுரைகள் மட்டுமே வெளிவந்துள்ளன. ஆனால், இவை அழகியல் தொடர்-பான அடிப்படை விளக்கத்தைக்கூட முழுமையாக வெளிப்படுத்தி உள்ளன எனக் கூற முடியாது.
தமிழில் இலக்கியக் கோட்பாடுகள் பற்றி ஓரளவு பேசப்பட்டாலும் கலைக்கோட்பாடுகள் பற்றி சரியாகப் பேசப்படவில்லை. எந்த ஒரு படைப்புக்கும் பின்னால் ஏதாவது ஒரு கோட்பாடோ பல கோட்பாடுகளோ அடிப்படையாக இருக்-கும். இந்த கலைப்படைப்புகளை எத்தனை கோணங்களிலிருந்து பார்க்க முடியும் என்பதற்கான தெளிவை முன்வைக்கும் பொழுதுதான் 'அழகியல்' பற்றிய தேடல், சிரத்தை மேற்கிளம்பும். 
இந்தத் தேவையை உணர்ந்து தான் அழகியல் அடிப்படை-களை எடுத்துரைக்கும் பாங்கில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா 'அழகியல்' எனும் இந்நூலை எழுதியுள்ளார். இதுவரை தமிழர் அழகியல், பண்டைத் தமிழர் அழகியல், மார்க்சிய அழகியல் தொடர்பாக சில கட்டுரைகள் சில நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு 'அழகியல்' என்ற எண்ணக்கரு பற்றிய அடிப்படைகளை கலைக் கோட்பாட்டியல் பின்னணியில் இருந்து நுண்ணியதான விளக்கத்தை தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, கலைப்படைப்பு பற்றியும் கலைகள் நுகர்வோருக்கு தரும் அனுபவம் பற்றியும் மேற்கொள்ளும் கருத்தாடல் விடயத் தெளிவைத் தருகின்-றன. பல்வேறு கடினமான பகு


மா.செல்வராஜா
M.Selvarajah

மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை மா.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல்  'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டி