புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

முதுசம்

'சிறுகதை வாழ்க்கையின் சாரளங்கள். வாழ்க்கையிலே ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை, அல்லது ஒரு சம் பவத்தை எடுத்துக் கூறுவது' என்கிறார் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன். 
'எழுதுவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏன் என்றால் எனக்குத் தெரிந்தவற்றைத்தான் நான் எழுதுகின்றேன். எனக்குத் தெரியாதவற்றை நான் ஒருபோதும் எழுதுவதில்லை' என்று உலகம் மதிக்கும் மக்கள் எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கி கூறிய வாசகங் களை மனத்தில் நிறுத்தி எனக்குத் தெரிந்தவற்றைப் படைப்புக்களாக எல்லோரும் புரிந்துகொள்ளும் மொழிநடையில் எழுதியுள்ளேன். 
'இலக்கியம் காலத்தின் கண்ணாடி' என்று சொல்வார்கள். சமுதாயத்தின் கண் நான் கற்றபாடங்கள் இன்றைய காலகட்டத்தின் அவசியம் கருதி அவற்றை வெளிக்கொணர வேண்டும் என்ற உந்துத லால், சிறுகதைத் தொகுதியாக வாசகர்கள் முன் வைத்துள்ளேன். 
இலக்கியம் பொழுதுபோக்குக் கருவி அல்ல. நயம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக் கூடியதும் அல்ல. மக்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டியதே இலக்கியம். 
உண்மையான கோரங்களை நான் தெரிந்துகொண்டிருக்கின் றேன். தினசரி வாழ்க்கையில் நிகழும் கோரங்களை நான் தரிசித்த வண்ணம் இருக்கின்றேன். நாம் வாழும் வாழ்க்கை கீழ்த்தரமான சாக்கடை வாழ்க்கை என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித சமூகத்தை நான் அளவுகடந்து நேசிக்கின்றேன். என்றாலும் பிறருக்கு வேதனையளிக்க நான் விரும்பவில்லை. 
நாம் மானசிகமாக இருக்கக் கூடாதென்றும், அழகிய சொற் றொடர்களாலும், கவர்ச்சிகரமான பொய்களாலும் உண்மையை மூடிமறைக்கக் கூடாதென


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
Muthuthtampippillai, A

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாத