புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பாடசாலைகளை முகாமை செய்தல் சமகால அணுகுமுறை

பாடசாலை அதிக சமூக கவன ஈர்ப்புக்குரியனவாகிவிட்டன. ஊடகங்கள், சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், உதவி வழங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போன்ற பலரும் பாடசாலைகள் முகாமை செய்யப்படும் முறைமை பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அதிக நிதியை செலவிடும் அரசாங்கமும் தனது நிதிவளம் நன்கு முகாமை செய்யப்படவில்லை என்று கண்டனங்களைத் தெரிவிக்கின்றது. பெற்றோர் கூட மாணவரை ஈர்த்துக்கொள்ளும் வகையில் அவை முகாமை செய்யப்படவில்லையென்றும் அதனால்தான் தனியார் பாடசாலைகளும், கல்வி நிறுவனங்களும் வளர்கின்றன என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த பின்னணியை மனதில் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளேன். சமகால முகாமைத்துவ அறைகூவல்களை எதிர்கொள்ளும் புதிய தகைமை மற்றும் திறன்கள் பற்றி அதிக கவனத்துடன் எழுதியுள்ளேன்.
அதிபர்களுக்கும், பகுதித்தலைவர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும் இது மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன். 
இந்த நூலை எழுதும்போது எனக்கு நிறையவே உதவிய அன்பு மனைவி சசிலேகாவுக்கு நிச்சயம் நன்றி கூறவேண்டும். 
மிக அபாயகரமான காலப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உயிரோட்டத்துடன் முகாமை செய்த பேராசிரியரிரும், சிந்தனையாளரும், உன்னதமான மனித விழுமியங்களும் கொண்ட யதார்த்தவாதி பேராசிரியர் முன்னாள் துணைவேந்தர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்வதன் மூலம் நான் மனநிறைவடைகின்றேன்.
எனது இந்த நூலை வெளியிடுவதில் அக்கறை கொண்டு, அழகாகவும், திருத்தமாகவும் இதனை வெளியிடும் சேமமடு பதிப்பக உரிமையாளர் திரு.பத்மசீலன் அவர்களும் அவர


சந்திரசேகரம், பத்தக்குட்டி
Sandrasekaram, Paththakuutti

 கல்வியியல் துறையில் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்தவர். கல்வியியலை தமிழ்மொழி மூலம் கற்பித்த முன்னோடி. தமிழ்மொழி மூலம் உயர்நிலையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென்பதை நிரூபணமாக்கியவர். தாய்மொழிக் கல்வி வாயிலாகவே புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிவுருவாக்கச் செயற்பாடுகளையும் மேற்கொண்டவர். கல்வித் தத்துவம் தொடர்பான விரிநிலை சிந்தனையும் ஆழமான தரிசனமும் கொண்டவர். இதனால் சில நூல்களையும், கட்டுரைகளையும் ஆக்கியவர். கல்வித் தத்துவத்தை உயர்நிலையில் எடுத்துரைப்பதற்குரிய வலுவான மொழிக்கட்டமைப்பைத் தமிழில் உருவாக்கியவர். கல்வியியல் சார்ந்த பல எண்ணக்கருக்களையும்  தமிழில் உருவாக்கியவர். மேலைத்தேய, கீழைத்தேய தத்துவ சிந்தனை மரபுகளுடன் ஊடாடி நமக்கான அறிகைமரபை கல்விமரபை மீள்கண்டுபிடிப்பதிலும்