புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமூக வானொலி

சமூக அபிவிருத்திக்கான ஊடகத்தை வலுப்படுத்தல்
மக்கள் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன், அவர்களின் விருப்புக்களை பாதுகாத்து, மக்கள் தமக்குத் தேவை என்று கருதுகின்றவற்றை விடயப்பரப்பாகக் கொண்டிருக்கும், மக்களின் தொடர்பினை அதிகரிக்கச் செய்யும்; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய நிகழ்ச்சிகளைப் படைக்கும்; சகோதர சமூகத்த வர்களின் வாழ்வியல் மீதான பரீட்சயத்தை அதிகரிக்கச் செய்யும்; சிறந்த மானிடப் பண்புகளை வளர்த்து, மக்களின் அன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை நிகழ்ச்சிகளில் உள்ளடக்கி, அத்தகைய பிரச்சினைகளுக்கு உரியவர்களிடமிருந்து தீர்வுகளைத் தருவிக்கும்; பால், இன, மத பேதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி - தொடர்பாடல் நிகழ்ச்சிகளின் போது சகலருக்கும் சமவள வான வாய்ப்புகளை வழங்கும்; ஏகாதிபத்திய அல்லது சட்டவிரோத சக்திகளைவிட்டும் விலகிவாழும் பக்குவத்தையும் ஆற்றலையும் வளர்த்து வலுவான ஒரு சமுதாயத்தைத் தரிசிப்பதை இலக்காகக் கொள்ளும் ஒரு சமூக ஊடக நிறுவனமே சமூக வானொலியாகும். 
இலங்கையைப் பொறுத்தவரை, சமூக வானொலிக்கான தேவை உணரப்பட்டு சுமார் மூன்று தசாப்தங்களாகிவிட்டன. மகாவெலி சமூக வானொலித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்குள் இலங்கையின் சமூக வானொலிகள் குறிப் பிடத்தக்க அடைவுகளைச் சந்தித்திருக்கின்றன. 
கிராமிய மக்களின் வாழ்க்கையின் எந்தவொரு பகுதியிலும் வானொலி தனது தாக்கத்தைச் செலுத்தலாம் என்பதற்கு இலங்கை யின் ஆரம்பகாலச் சமூக வானொலிகளின் செயற்பாடுகள் சான்றாக இருந்துள்ளன. கள ஆய்வு, நேரடியாகச் சென்று நேயர்க


ரீ.விக்னேஸ்வரன்
Vigneswaran, T

திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் முன்னாள்  விரிவுரையாளரும், தற்போதைய வருகை விரிவுரையாளரும் ஆவார்.  இவர் நெடுங்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் றோட்டறிக்; கழகத்தின் அங்கத்தவராக இருந்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுபவர். 

 
அரசறிவியல் பாடங்களை இற்றைப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து தேடலும், வாசிப்பும் கொண்டு தனது ஆளுமையை செழுமைப்படுத்துபவர். அரசறிவியல் மாணவர்களுடனும், ஆர்வமுள்ள வாசகர்களுடனும் பல புதிய செய்திகளை, புதிய கோணத்தில் பகிர்ந்துகொள்ள துடிப்பவர். அரசியல் சார்ந்த ஆக்கங்களை படைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்.