புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமய உளவியல்

இது சமய உளவியல் தொடர்பாக தமிழில் முதலில் வெளிவரும் நூல். ஆங்கிலமொழியில் இத்துறையில் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் இது ஒரு பாடத் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
நவீன உளவியல் சமயத்தைப் பல பரிமாணங்களிலே ஆராய்கின்றது. அகவய நிலையில் மட்டுமன்றி புறவய நிலையிலும் சமயத்தை நோக்குதல் அறிவு நோக்கில் முக்கியமானது.
'ஒப்பியல் சமயம்' என்ற அறிவுத்துறையும் அண்மைக்காலமாகப் பெருவளர்ச்சியடைந்து வருகின்றது. சமய உளவியல் ஒப்பியல் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமயங்களுக்கிடையே காணப்படும் பொதுத்தன்மைகள் அடிப்படையான மானிட இயல்புகளைப் புலப்படுத்துகின்றன. உளவியல் அதனை மேலும் ஆழ்ந்து நோக்குகின்றது.
இலங்கைப் பள்ளிக்கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் சமயம் ஒரு பாடமாக இடம்பெற்றுள்ள நிலையில் சமய உளவியல் பற்றிய அறிவு மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
சிறப்பு வாசிப்பை மட்டுமன்றி, பொது வாசிப்பையும் கருத்திற் கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.

சபா.ஜெயராசா

 


சசிகலா குகமூர்த்தி
Sasikala Kugamoorthi

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்ற கலாநிதி சசிகலா குகமூர்த்தி அவர்கள் கல்வித்துறையில் சுமார் மூன்று தசாப்தகால அனுபவத்தினைக் கொண்டவராவார். 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்ற இவர் ஆசிரியப் பணியில் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியில் தமிது சாதனைக்காக தங்கப்பதக்கத்துடன் கூடிய டிபளோமாவினையும், அதே பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுதத்துவமானி பட்டத்தையும் பின்னர் ஆசிய அபிவிருத்திவங்கியின் புலமைப்பரிசில் பெற்று தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டவராவார்.