புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமகாலக் கல்வி

நூலாசிரியர் உரை
சமகாலக் கல்வியின் பலபரிமாணங்களையும் உள்ளடக்கிய ஓர் ஆக்கமே இந்நூல். பல்வேறு நூல்களையும் அறிக்கைகளையும் அடியொற்றி இந்நூல் எழுதப் பெற்றுள்ளது.
சமகாலக் கல்விச் செயல் முறையின் நவீன எழுகோலங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தெளிவான ஒரு கருத்தியல் நோக்கு கல்வி பற்றிய விளக்கத்துக்கு அடிப்படையானது. அந்நிலையில் உற்றறி கோட்பாடு இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.
அறிவை விபரணச் சிக்கலுக்குள் அடக்கிவிடும் ஓர் அவலமான நிலை காணப்படுகின்றது. திறனாய்வுடன் அறிவைத் தரிசிக்கும் அறிகைப் பரவல் முன்னெடுப்பை வலியுறுத்தும் தேவை எழுந்துள்ளது.
பாடக்குறிப்புக்களை உள்வாங்குதலும் மீள ஒப்புவிப்பதுமான கற்றல் முறையை விடுவிப்பதற்கு மாணவரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. அந்நிலையில் போதுமான நூல்களை உருவாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது.
-சபா.ஜெயராசா

 


இரா.இளங்குமரன்
Illankumaran, Era

கடலொன்று கடல்கடக்கும் ஆயத்தங்கள்
கவின்அல்லூர் தனில்நிகழ்வ துண்மை யுண்மை;
மடைதிறந்த வெள்ளமதும் பின்னை ஓடும்
மாமேதை குறட்குமரர் வாய்தி றந்தால்;
கடைவிரித்துக் கொள்ளாமல் கட்டிக் கொண்டோர்
காசினியில் பலர்உருகும் இந்த நாளில்,
படைவென்றே ஊர்திரும்பும் பாங்கு பொங்கப்
பலருமிவர் குறளமுதம் பருகச் செல்வர்!

தளர்மனத்து இளைஞர்களைக் கவர்ந் திழுக்கும்
தலைவர்கள் இத்தரணிதனில் யாருமில்லை!
வளமான குறள்வேத வழிந டப்பின்
வாழ்வுசிறப் படையும் அப்பணிசெய் தற்கே
இளங்குமர அய்யாவே இருக்கின்றீர் நீர்