புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அரசியல் விஞ்ஞானம் : அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்

அரசியல் நடவடிக்கை பரந்த சமூக முறையின் பிரிக்க முடியாத பகுதியாகும். இதனால் அரசியல் விஞ்ஞானம் உறுதியாக சமூக விசாரணை என்ற பரந்த பரப்பில் நிலைகொண்டிருக்கின்றது என லாம். சமூக விஞ்ஞானங்கள் சமூகக் குழுக்களின் மனித நடத்தை தொடர்பான விடயங்கள் பற்றிய கற்கையினை ஏதோவொரு வகை யில் கவனத்தில் கொள்கின்றன. சமூகவியலாளர்கள் ஒரே விதமான தகவல்களைச் சேகரித்து ஒரேவிதமான கருதுகோள்கள், கோட்பாடு களின் அடிப்படையில் ஒரேவிதமான கண்டுபிடிப்புகள் அல்லது முடிவுகளுக்கு வருகின்றனர். விஞ்ஞான ரீதியான விசாரணையின் நோக்கம் மனப்பதிவுக்கு அறிவைப் பதிலிடுதலாகும். விஞ்ஞானம் நம்பிக்கையான அறிவைத் தேடுகிறது என்ற அடிப்படையில்  என்ன நடந்தது?  என்ன நடக்கிறது? என்பவைகளை எதிர்வு கூறவும் முடியும்.
அண்மைக்கால சிந்தனையாளர்கள் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசின் கொள்கை உருவாக்கம் அதனை நடைமுறைப்படுத் தல், மோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல் தீர்வு என்பனவற்றை யும் கவனத்தில் கொள்ளுமொரு கற்கைநெறி என்றும் விளக்கமளிக் கின்றனர். மேலும் அரசியல் விஞ்ஞானிகள் அரசாங்கத்தின் வரவு செலவுத் தீர்மானங்களை விளங்கிக் கொள்ளுவதற்குப் பொருளாதாரத் தரவுகளைப் பயன்படுத்துவது அவசியம் என்பதையும் ஏற்றுக் கொண் டுள்ளனர். இதற்காகப் பொருளியலாளர்களின் கோட்பாடுகளைக் கடன்வாங்க ஆரம்பித்துள்ளனர். மேற்குறிப்பிட்ட சகல விடயங்களும் இறுதியாக அரசுடன் தொடர்புபடுகின்றதுடன், எந்தவொன்றும் அரசி லிருந்து விடுபடாமல் அரசைமையமாகக் கொண்டு பல்வேறு திசை களில் பரவியுள்ள துணைப்பிரிவுகளுமாகும். அரசியல் கல்வி ஆளு பவர்களுக்கும், ஆளப்படுகின்ற


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச