புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்

உலகக் கல்விப் பரப்பிற் கல்வியியல் தொடர்பான மரபுவழிக் கருத்துக்களையும் மாற்றுக்கருத்துக்களையும் அறிந்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இந்நூலாக்கம் முகிழ்த்துள் ளது. இவ்வாறான ஒரு நூலின் தேவையைக் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் நண்பர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நண்பர் பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களும் என்னிடத்துக் கூறியதுடன் ஆக்க முயற்சிக்குக் காணும் போதெல்லாம் ஊக்கம் தந்தனர். இந்நூலாக்கத்துக்கு வேண்டிய உசாவல் நூல்களை அவர்கள் தந்துதவியவேளை, தேசிய கல்வி நிறு வகத்திலிருந்து மேலும் பல நூல்களை நண்பர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்களும், கல்வி அமைச்சிலிருந்து நண்பர் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களும் தேடிவந்து தந்தனர். இந்நண் பர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். கல்வியியலில் மாற்றுச் சிந்தனைகளின் தேவையை நூல் வடிவிலே தரும்படி வேண்டிக் கொண்ட நண்பரும் 'கூடம்', 'அகவிழி', 'ஓலை' ஆகிய மூன்று சஞ்சிகைகளின் ஆசிரியருமாகிய தெ.மதுசூதனன் அவர்கள் உற்சாகம் தரும் நண்பராகி இயங்கிக் கொண்டிருத்தலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 
இத்துறையில் வளமான ஊக்கலைத் தந்துகொண்டிருக்கும் நண்பரும் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அதிபருமாகிய கலாநிதி த.முத்துக்குமாரசாமி அவர்களும் மிக்க நன்றிக்குரியவர். இந்நூலை வெளியிடும் சேமமடு வெளியீட்டு நிறுவனத்தினர் நன்றிக்குரியவர்கள். 
இந்த இரண்டாம் பதிப்பை மேலும் திருத்தங்களுடன் வெளியிடப்படுவதற்குரிய ஊக்கங்களைத் தந்த நண்பர்களுக்கு நன்றி.
சபா .ஜெயராசா
<


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச