புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

மாற்றமுறும் கல்வி முறைமைகள்

கடந்த ஐந்து தசாப்த காலப்பகுதியில் கல்வியியல் கற்கைநெறி சார்ந்த 200 நூல்கள் வரை இலங்கைக் கல்வியாளர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன என்பதை எமது மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது (இது பற்றிய நூற்பட்டியலொன்றை அண்மையில் தயாரித்து வெளியிட்டுள்ளோம்). கல்விப் புலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மற்றும் கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இத்துறையில் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்திருப்பதை இவ்விடத்து உளமாரப் பாராட்டுகின்றோம். இக்கல்வியியல் எழுத்துப் பணியின் தொடர்ச்சியாகவே இந்நூல் வெளிவருகின்றது. சேமமடு பதிப்பகம், அதன் உரிமையாளர் திரு.பத்மசீலன் ஆசிரியம் சஞ்சிகை ஆசிரியர் திரு.மதுசூதனன் ஆகியோர் இக்கல்வியியல் நூல் வெளியீட்டுப் பணியில் முன்னின்று உழைத்து வந்துள்ளனர். இந்நூல் வெளியீட்டையும் முன்னின்று செயற்படுத்துபவர்களும் அவர்களே. இவ்வகையில் தமிழ்க் கல்வியுலகம் அவர்களை சிறப்பாகப் பாராட்டிக் கௌரவிக்க வேண்டிய கடப்பாடொன்றுண்டு.

கல்வியியலைப் பல்கலைக்கழக மட்டத்தில் கற்க முற்பட்ட முன்னோடிகளுள் நானும் ஒருவன். 1964ஆம் ஆண்டளவில் நான் பேராசிரியர் சபா. ஜெயராஜாவுடன் ஒரு காலை மாணவனாகக் கல்வியயலைக் கற்கத் தொடங்கிய காலத்தில் ஒரு தமிழ் நூலாவது உசாத்துணையாக கிடைத்ததாக ஞாபகமில்லை. எங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பல சிரமங்களுடன் ஆங்கிலக் கல்வியியல் நூல்களைப் படித்தோம். எவ்வாறாயினும் கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில் மொத்தத்தில் 200 கல்வியியல் நூல்கள் வந்திருப்பது ஒரு வகையில் பாராட்டத்தக்கது. ஆனால் மறுபுறம், சராசரியாக ஆண்டுக்கு நான்கு நூல்களே என்று சிந்திக்கும் போ


செல்வரத்தினம் சந்திரசேகரம்
Selvarathinam Chanthirasekaram

கலாநிதி செ.சந்திரசேகரம் யாழ்பாண பல்கலைகழகத்தில் 1996இல' பொருளியல் சிறப்பு பட்டதாரியாக வெளியேறி 1999இல் கொழும்பு பல்கலைகழகத்தில் உதவி விரிவுரையாளராக இணைந்து அங்கு முதுமானிப் பட்டம் பெற்றவர். 2002இல் யாழ்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக இணைந்து 2004 இல் மக்கள் சீனக் குடியரசிக்குப் புலமைப்பரிசில் பெற்று சென்று, அங்கு புகழ் பெற்ற குவாசோங் விஞ்ஞான தொழிநுட்ப பல்கலைகழகத்தில்  (HUST) 'இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கும் பணவீக்கத்திற்குமான சமூக அரசியல் காரணிகள்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து 2008இல் கலாநிதிப்பட்டம் பெற்றவர்.
இவரது இந்த ஆய்வுக்கட்டுரை ஜேர்மனியில் உள்ளப் புகழ்பெற்ற LAMBERT கல்வி வெளியீட்டு சமூகத்தினால் நூல்வடிவம் பெற்றுள்ளது. இவருடைய அரசியல் பொருளியல்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பல உலகின் புகழ்பெற்ற ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.