புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

இலக்கியத் திறனாய்வின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டறியும் ஆக்கமாக இந்நூல் மேலெழுந்துள்ளது. பழைமையின் இயல்புகளையும் புதுமையின் வகைப்பாடுகளையும் அறிதல் திறனாய்வின் புலக்காட்சியை வளம்படுத்திக் கொள்வதற்கும், திறனாய்வு அறிகையை வலுப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புத் தருகின்றது. 
'திறனாய்வு எங்கும் தலை நீட்டுகின்றது' (ஊசவைiஉளைஅ ளை நுஎநசல றூநசந) என்ற கருத்து அது பற்றி அறியும் தேவையை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. இத்துறையின் இற்றைப்படுத்தலை முன்னெடுக்கும் நூலாக்கத்தின் தேவையை நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும் சேமமடு பதிப்பகத்தின் இயக்குநர் பூ.பத்மசீலன் அவர்களும் குறித்துரைத்தனர். அவர்களின் விருப்பம் இந்நூலாக வரைவு பெற்றுள்ளது. 
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இந்நூலை எழுதுவதற்குத் தொடர்ந்து உற்சாகம் தந்தனர். சிறப்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்து முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்களும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்து முதுநிலை விரிவுரையாளர் திரு.கே.இரகுபரன் அவர்களும் உற்சாகத்துக்கு விசை தொடுத்தனர். இவர்கள் அனைவரும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். 

சபா.ஜெயராசா
நாம் தமிழ்ப் பதிப்புத்துறைக்குள்  குறுகிய காலத்துள் நுழைந்து இன்றைய கல்வித் தேவைக்கருதி மிகவும் பயனுள்ள நூல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளோம். இந்த ரீதியில் எமது பதிப்பாக்க முயற்சிகளுக்கு ஆரம்பம் முதல் ஆலோசனைகள், அறிவுரைகள் தந்து, தமது காத்திரமான நூல்களை வெளியிடவும் தொடர்ந்து சந்தர்ப்பம் வழங்கிக்கொண்டிருக்கும் பேராச


க.சின்னத்தம்பி
K.Sinnathampi

கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் விரிவுரையாளராக பேராசிரியராக துறைத் தலைவராகப் பலநிலைகளில் பணியாற்றியவர். நீண்டகால கற்பித்தல் அனுபவமும் ஆராய்ச்சி மரபும் கொண்டவர். ஆசிரியர் கல்வியில்       புத்தாக்கமும் பல்பரிமாணமும் சிறக்க உழைத்து வருபவர்.
 
இவர் விஞ்ஞான கணித அறிவுத் தொகுதியின்  விரிவாக்கப் புலங்களை உடனுக்குடன்        உள்வாங்கி கல்வியியலில் புதுமலர்ச்சி ஏற்பட முயற்சிப்பவர். இவரது நூலாக்கப் பணிகள்   கல்வியியல் துறையில் புதுஆய்வு மரபு, ஆக்கமலர்ச்சிப் பண்புகள் புத்தாக்கச்           சிந்தனைகள் ஏற்படக் காரணமாக விளங்குகின்றன. இதற்கு இவரது ஆக்கங்கள் மேலும் வலுச்சேர்க்கின்றன.

சமகால கல்வி வளர்ச்சியில் தரவிருத்தியை உறுதிப்படுத்தும் ஆய்வுக் களங்களை         முன்னிறுத்தி இயங்கி வருபவர்.